வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
வணக்கம் வாசகர்களே.
ஜப்பான்காரங்க உழைப்புக்கு ரொம்பவே பேர் போனவர்கள். அவர்கள் வேலை நிறுத்தம் மாதிரி போராட்டம் செஞ்சாக்கூட வித்தியாசமா செய்வாங்கனு நாம கேள்விப்பட்டிருப்போம். அதாவது ஒரு ஷூ கம்பெனில போராட்டம் பண்ணுறேன்னு சொல்லி, வேலைய நிறுத்தாமா, வெறும் ஒரு காலுக்கு மட்டும் ஷூ தயாரிப்பாங்கன்னு நாம படிச்சிருக்கோம்.
அதே மாதிரி சமீபத்தில் இத்தாலில ஒரு வித்தியாசமான போராட்டத்திற்கு இவங்க தயார் ஆகிட்டு இருக்காங்க. ஆமாங்க, அவங்களோட மிகவும் பிரியமான உணவான பாஸ்தா, இத ஒரு வாரத்துக்கு சூப்பர்மார்கெட்ல இருந்து வாங்காம போராட்டம் பண்ண கிளம்பியிருக்காங்க.
ஏன் அப்படி ஒரு போராட்டம்? வேறென்ன, எக்குதப்பா ஏறியிருக்குற விலைவாசி தான்.
அத்தியாவசியமான பொருளான பாஸ்தா, கடந்த ஒரு வருடத்துல கிட்டத்தட்ட 20% விலை ஏறிடிச்சி அப்பிடின்ற எரிச்சல். விலைவாசியை இத்தாலிய அரசு கட்டுப்படுத்தவோ, இல்லை அதை கட்டுக்குள்ள வைக்கவோ எந்த ஒரு முயற்சியும் எடுக்கலேன்னு தான் இந்த போராட்டம்.
ஒரு காலத்துல கோதுமையை வாங்கி, மாவா அரைச்சு, தண்ணியும் முட்டையும் சேர்த்து இவங்க கையிலேயே விதவிதமான பாஸ்தா செஞ்சிட்டு இருந்தாங்க.
அப்புறம், எப்படி நாம்ப மசாலா அரைக்கிறத விட்டு மசாலா பவுடர் பாக்கெட்டுக்கு மாறினோமோ, கோதுமை வாங்கி மாவு அரைக்கிறத விட்டு மாவையே வித விதமான பாக்கெட்ல வாங்கினோமோ அந்த மாதிரி, இவங்களும் வாங்க ஆரம்பிச்சாங்க.
சூப்பர்மார்கெட் முழுவதும் கிடைக்கிற இந்த பாஸ்தா தான் இன்னைக்கு இப்படி விலை ஏறி இருக்குது.
கார்ப்பரேட்னா சும்மாவா?
ஐரோப்பா முழுவதும் இந்த விலைவாசியை கட்டுப்படுத்த அந்த அந்த அரசாங்கம் கொஞ்சமாச்சம் முயற்சி செய்யுதுனு சொல்லுறாங்க. ஆனா, இத்தாலி அரசாங்கம் அந்த விசயத்தை அந்த அந்த மாநில அரசு கிட்டயே விட்டுட்டாங்க. இவங்களும் அத கண்டுக்காம இருக்குறதுனால விலை ஏறிட்டே இருக்கே தவிர குறையவே இல்ல.
கடந்த ஒரு வருடத்துல உலகம் முழுவதுமே அத்தியாவசிய பொருட்களின் விலையேறியது நாம் அறிந்ததே. ஆனாலும், ஐரோப்பியாவில் மட்டும் அது மிக அதிக உச்சத்தை தொட்டது என்பதே உண்மை. இதற்கு முக்கிய காரணம் கடந்தாண்டு துவங்கிய ரஸ்யா-உக்ரைன் போர் என்றே கூற வேண்டும்.
இதன் காரணமாக மூலபொருட்களின் விலையும் தயாரிப்பு செலவுகளும் கூடவே பொருட்களின் விலைகளை கூட்டிருப்பதாக தயாரிப்பாளர்கள் கூறுகிறார்கள்.
இருப்பினும், பல மாதங்களாக உச்சம் தொட்ட விலை தற்போது பல பொருட்களுக்கு குறைந்திருக்கிறது. எனவே உற்பத்தி செலவுகள் குறைந்திருக்க வேண்டும். ஆனால், ஏறிய விலைகள் இறங்காமலேயே இருப்பதால் தான் இந்த போராட்டம்.
கார்ப்பரேட்டுகள் தங்கள் அசுர லாபத்துக்காக தான் உற்பத்தி விலையை விட பலமடங்கு அதிகமான விலையில் விற்பதாக இவர்கள் குற்றம் வைக்கிறார்கள். இதில் பெரிதும் அவதிக்குள்ளாகி இருப்பது ஓய்வூதியம் பெற்று வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் முதியவர்கள் தான்.
இத்தாலியில் இது போன்ற பாஸ்தா போராட்டம் நடைபெறுவது இது முதல்முறை அன்று. 2007-ல் ஒரு முறை இதே போன்ற ஒரு போராட்டம் நடைபெற்றது.
மீன், மாமிசம், முட்டை போன்ற மற்ற பொருட்களை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது பாஸ்தா என்பது மிகவும் விலை குறைத்த ஒரு பொருள். பின் எதற்காக விலை குறைவான ஒரு பொருளை புறக்கணிக்க போராட்டம்?
அதற்கு முக்கிய காரணம் பாஸ்தா என்பது இவர்கள் வாழ்வின் ஒரு முக்கிய அங்கம். மனோரீதியாக இது அனைத்து மக்கள் மனதிலும் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே தான் இதை போராட்டத்தின் முக்கிய பொருளாக கருதுகிறார்கள்.
இதை இத்தாலியர்கள் போராட்டம் என்ற கோணத்தை விட ஒரு பெரும் தியாகமாகவே பார்க்கிறார்கள். ஏனெனில் இவர்களால் பாஸ்தாவின்றி தங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ முடியாது. இவ்வுலகில் எந்த மூலைக்கு சென்றாலும், ஒரு பாஸ்தா உண்டால் தான் இவர்கள் நாட்கள் முழுமை பெரும்.
அப்படிபட்ட பாஸ்தாவை தான் இவர்கள் ஜூன் 22 முதல் ஒரு வாரத்திற்கு சூப்பர்மார்கெட்டில் இருந்து வாங்குவதை புறக்கணிக்க முடிவு செய்துள்ளார்கள்.
எங்கள் அரசாங்கம் இந்த விலைவாசிகளை கட்டுப்படுத்தாமல் மெத்தனம் காட்டுகிறது, அதற்கு தக்க பாடம் புகட்டுவோம் என்று கிளம்பியுள்ளார்கள் இவர்கள்.
கண்டங்கள் மாறினாலும், கலாச்சாரங்கள் மாறினாலும் இந்த அரசியல்வாதிகள் மட்டும் மாறுவதே இல்லை என்பது எவ்வளவு உண்மை?
எப்படி இந்தியாவில் ஒரு சாதாரண வெங்காய போராட்டம் ஒரு ஆட்சி மாற்றத்திற்கே முக்கிய காரணமாக இருந்திச்சோ அது மாதிரி இங்கயும் ஏதோ ஒரு மாற்றம் வருமான்னு பொறுத்திருந்து பார்ப்போம்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.