விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது38), விவசாயம் செய்து வருகிறார். வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக, சரவணக்குமார் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக வத்திராயிருப்பு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சரவணக்குமார் வீட்டுக்குச் சென்ற போலீஸார் அங்கு திடீர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், சரவணக்குமாரின் வீட்டிலிருந்து இரண்டு நாட்டுத்துப்பாக்கிகள், 21 தோட்டாக்கள், வெடிமருந்து நிரப்பப்படாத 57 தோட்டாக்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதைத் தொடர்ந்து, சரவணக்குமாரைக் கைதுசெய்த போலீஸார், அவரிடம் நாட்டுத்துப்பாக்கிகள் எங்கு யாரிடமிருந்து வாங்கப்பட்டன… துப்பாக்கியை வைத்து வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டதா என விசாரணை நடத்தி வருகின்றனர். கைதுசெய்யப்பட்ட சரவணகுமார்மீது, மதுரை மாவட்டம், அவனியாபுரம் காவல் நிலையத்தில் அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்ததாக கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு பதிவுசெய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.