ரேடாரில் அதிமுக மாஜி.. செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் ஐ.டி. ரெய்டு பின்னணி !!
கோவை: ரியல் எஸ்டேட் அதிபர் செந்தில் கார்த்திகேயன் தொடர்புடைய இடங்களில் ஐ.டி ரெய்டு!
கோவை, கொடிசியா பகுதியிலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு இல்லை. சமீபத்தில் அ.தி.மு.க-விலிருந்து தி.மு.க-வில் இணைந்த ரியல் எஸ்டேட் அதிபர் செந்தில் கார்த்திகேயன் வீடு மற்றும் அலுவல்களில் ஐ .டி ரெய்டு நடக்கிறது.
ஐ.டி ரெய்டுக்கு வந்த அதிகாரிகள்… முற்றுகை, கார் கண்ணாடியை குத்தி உடைத்த செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள்!
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில், இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, கரூர் உட்பட பல்வேறு இடங்களில் சோதனை பரபரத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், கரூரில் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொள்ளச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளை, அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அதிகாரிகள் வந்த கார் கண்ணாடியை ஜாக்கியால் குத்தி உடைத்துச் சேதப்படுத்தினர். செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் பெருமளவில் குவிந்திருப்பதால், அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாக 81 பேரிடம் 40 கோடி ரூபாய் மோசடி செய்தாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த விவகாரம் தொடர்பான வழக்கில், இரண்டு வாரங்களில் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என அண்மையில் உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் அரசு ஒப்பந்ததாரர்களின் அலுவலகம் மற்றும் இல்லங்களில் வருமான வரித்துறை இன்று காலைமுதல் சோதனை நடத்தி வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை, கரூர், கோவை உட்பட பல்வேறு இடங்களில் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக, கரூரில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் தொடர்புடைய இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். மேலும், ஹைதராபாத், பெங்களூருவிலும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருவதாகக் கூறப்படுகிறது.