இந்தியா முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவு சாலைகளில் வாகனங்களில் பயணிக்கு ஏப்ரல் 1-ம் தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் 5 – 10 சதவிகிதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுங்கச்சாவடி கட்டண உயர்வு குறித்து இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

சுங்க சாவடி

சுங்கச்சாவடி கட்டணம் ஆண்டுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கார், இருசக்கர வாகனம் போன்ற இலகுரக வாகனங்களுக்கு ஒரு பயணத்திற்கு 5 சதவிகிதமும், கனரக வாகனங்களுக்கு 10 சதவிகித சுங்கச் சாவடி கட்டண உயர்வும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது சுங்கச் சாவடிகளில் ஒரு கிலோமீட்டருக்கு 2.19 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்ந்தால், தனியார் வாகனங்களின் கட்டணமும் உயரும் என்ற பயமும் பயணிகளிடையே ஏற்பட்டு இருக்கிறது. 

மணவாசி சுங்கச்சாவடி

சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு குறித்த செய்தி பொது மக்களிடையே  வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் பட்சத்தில் ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்து வருகின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.