தெலுங்கு மற்றும் ஹிந்தி பட நடிகையான இலியானா, `நண்பன்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்குப் பரிச்சயமானவர். தனக்கென திரைத்துறையில் ரசிகர் பட்டாளத்தைப் பிடித்த இலியானா, சமீப காலங்களில் வெளி உலகிற்கு பெரிதும் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லை.
இந்நிலையில், சமீபத்தில் சமூக ஊடகத்தில், `பாடி பாசிட்டிவிட்டி’ (Body Positivity) குறித்து பகிர்ந்து கொண்ட இலியானா, “உங்கள் உடலை மிகவும் சிரமமின்றி மெலிதாகக் காண்பிக்கும் ஆப்களை பயன்படுத்துவது எளிது. அந்த அப்ளிகேஷன்களை நான் நீக்கியதில் பெருமை அடைகிறேன். என் உடலின் ஒவ்வோர் அங்குலத்தையும் வளைவையும் நான் அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
அதோடு இலியானாவிடம் மேற்கொள்ளப்பட்ட பேட்டியில், சில கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றுக்கு மனம் திறந்து பதிலளித்துள்ளார் இலியானா…
சில காலமாகவே திரையுலகில் இலியானா காணாமல் போனது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்தவர், “மக்கள் அப்படி காணாமல் போனதாகச் சொல்வதை வெறுக்கிறேன். நான் எங்கேயும் மறையவில்லை. இங்கேதான் இருக்கிறேன். நான் இருக்கும் இடம் குறித்து பகிர்ந்து கொள்ளாததால், என்னை பற்றி தகவல்கள் வெளியில் தெரிவதில்லை.
நிறைய படங்களின் ஷுட்டிங் வேலைகளை முடித்துவிட்டேன். நல்ல பல வேலைகளைச் செய்து வருகிறேன். ஆனால், அவற்றை மிகவும் அமைதியாகச் செய்கிறேன்’’ என்று பதிலளித்தார்.
அடுத்ததாக, `ரெட் கார்பெட் அல்லது திரைப்பட நிகழ்வுகளைத் தவிர பொதுவெளியில் அரிதாகவே தோன்றுவதால், திரைப்படத் தயாரிப்பாளர்களால் கவனிக்கப்படுவதில்லை என்று நினைக்கிறீர்களா’ என்று கேட்டனர். அதற்கு விளக்கமளித்த இலியானா, “நான் அப்படி நினைக்கவில்லை என்று சொன்னால், அது பொய் சொல்வதாகிவிடும். நிச்சயமாகச் செய்கிறேன்.
தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் தங்கள் நடிகர்களை இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். எனவே நான் ஒரே மாதிரியான எண்ணம் கொண்ட மற்றும் நான் வேலை செய்ய விரும்பும் நபர்களைச் சந்திக்க விரும்புகிறேன். நான் கடந்து வந்த பாதை அது. நான் வேலை செய்யும் போது, அதுவே எனது முன்னுரிமையாகிறது.
அந்த வேலையை முடித்த உடன், என்னுடைய குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவழிப்பேன். இதுதான் நல்ல சமநிலை என நான் நினைக்கிறேன், ஏனெனில் நான் 24/7 வேலை செய்யக்கூடிய ஆள் இல்லை’’ என்று கூறியுள்ளார்.
இலியானாவின் இந்த ஓபன் டாக் தற்போது வைரலாகி வருகிறது…