காரைக்கால் அடுத்த உள்ள திருநள்ளாறில் உலக புகழ் பெற்ற ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இதை சனி பகவான் ஆலயம் என்றும் பக்தர்கள் போற்றுவர். இங்கு ஒவ்வோர் ஆண்டு மகாசிவராத்திரிப் பெருவிழா வெகு விமர்சியாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டும் மகாசிவராத்திரிப் பெருவிழா நேற்று இரவு சிறப்பாக நடைபெற்றது.

தங்க ரிஷப வாகனத்தில் அருள்பாலித்தனர்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ பிராணாம்பிகை அம்பாள் சமேத ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் தங்க ரிஷிப வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

முன்னதாக நேற்று இரவு மகா சிவராத்திரியை முன்னிட்டு மூலவருக்கு நான்கு கால சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து ஆலய வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட தங்க ரிஷப வாகனத்தில் ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் மற்றும் ஸ்ரீ பிராணம்பிகை அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு கோபுர தரிசனம் அளித்தார். மேலும் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை செய்விக்கப்பட்டது.

தங்க ரிஷப வாகனத்தில் அருள்பாலித்தனர்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர மற்றும் ஸ்ரீ பிராணாம்பிகை அம்பாள் வீதி உலா நடைபெற்றது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.