பிரியாணி போட்டி: 20 நிமிடங்களில் 2.65 கிலோ சிக்கன் பிரியாணி சாப்பிட்டு ரூ.5,001 வென்ற இளைஞர்! நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் குச்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35). இவர், கட்டடத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி தேன்மொழி (28). இவர்கள் கடந்த சில வருடங்களாக வீட்டில் நாய்களை வளர்த்து வருகின்றனர்.

தற்போது, ரமேஷ் குடும்பத்தினர் பைரவன் என்ற ஆண் நாய் மற்றும் பைரவி என்ற பெண் நாய் என இரண்டு நாய்களை செல்லமாக வளர்த்து வருகின்றனர். இதில், பெண் நாய் பைரவி கர்ப்பம் அடைந்தது. இதையறிந்த ரமேஷ் குடும்பத்தினர், பைரவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த முடிவு செய்தனர். வளைகாப்பு நிகழ்ச்சிக்கு உறவினர்களுக்கு அழைப்பு விடுத்தனர்.

நாய்க்கு வளைகாப்பு நிகழ்ச்சி

இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் வளையல், பூ, சந்தனம், குங்குமம், புது உடை உள்ளிட்டவற்றை நாய்க்கு அணிவித்து, பைரவிக்கு வளைகாப்பு நடத்தினர். மேலும் தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், புளிசாதம் உள்பட 3 கலவை சாதம், இனிப்பு வகையில் கச்சாயம், கார வகையில் போண்டா, அப்பளம் உள்ளிட்ட ஒன்பது வகையான உணவுகளை தலைவாழை இலையில் வைத்து, நாய்க்குப் பரிமாறினர்.

அருகில் இருந்த உறவினர்களும் வந்திருந்து, நாய்க்கு நடத்தப்பட்ட வளைகாப்பில் கலந்து கொண்டனர். இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரமேஷின் உறவினர்கள், மொய்ப்பணம் வைத்தனர். நாய்க்கு வளையலும் அணிவித்து, பூத்தூவி வாழ்த்தினர்.

நாய்க்கு வளைகாப்பு நிகழ்ச்சி

ரமேஷிடம் பேசினோம். “நான் சின்ன வயதில் இருந்தே எங்கள் வீட்டில் நாய் வளர்த்து வருகிறேன். என் மனைவியும் நாய் மேல் பிரியமாக இருப்பார். அதனால், திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நாய் வளர்த்து வருகிறோம். பைரவனையும் பைரவியியையும் எங்கள் குழந்தைகள்போலதான் வளர்த்து வருகிறோம். அவர்களும் எங்கள் மேல் இணையற்ற பாசத்தை காட்டுவார்கள். எங்களுக்கு மட்டுமல்ல… இந்த ஏரியா மக்களுக்கே எங்கள் நாய்கள் செல்லப்பிள்ளைகளாகவும், காவலர்களாகவும் இருக்கிறார்கள்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.