வைகுண்ட ஏகாதசிசையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் பிரவேச டிக்கெட் விநியோகம் துவங்கியது.

நாளை வைகுண்ட ஏகாதசிசையை முன்னிட்டு முதல் 10 நாட்கள் ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும். இந்நிலையில், பக்தர்களின் வசதிக்காக நாள் ஒன்றுக்கு 45 ஆயிரம் பேர் என்ற கணக்கில் நான்கு லட்சத்து 50 ஆயிரம் இலவச வைகுண்ட வாசல் பிரவேச தரிசன டிக்கெட் என்ற பெயரில் தேவஸ்தான நிர்வாகம் இலவச விநியோகம் செய்ய முடிவு செய்தது.

image

இதற்காக திருப்பதியில் உள்ள 10 இடங்களில் 90 கவுண்டர்கள் அமைக்கப்பட்டு இன்று மதியம் முதல் டிக்கெட் விநியோகம் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், டிக்கெட்களை வாங்க நேற்று மாலை முதல் பக்தர்கள் குவிந்தனர். நேற்று இரவு திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள கவுண்டரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

image

இதையடுத்து மேலும் பக்தர்கள் வந்து சேர்ந்தால் கூட்ட நெரிசல் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ள காரணத்தால் தேவஸ்தான நிர்வாகம் முன்னதாகவே டிக்கெட் விநியோகத்தை துவக்கியது. பக்தர்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று டிக்கெட்களை வாங்கிச் செல்கின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.