நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் விவசாயி சந்தோஷ். இவர் தன் காய்கறிகளை மேட்டுப்பாளையம் மொத்த சந்தையில் விற்பது வழக்கம். அதன்படி நேற்று மேட்டுப்பாளையம் சந்தைக்கு வந்து காய்கறிகளை விற்பனை செய்துள்ளார்.
களைப்பாக இருந்ததால், கல்லார் பகுதியில் உள்ள ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான காட்டேஜில் ஓய்வெடுக்க சென்றுள்ளார். ராஜ் சுந்தர் என்பவர் ரிசப்ஷனில் ரூம் புக்கிங் செய்து கொடுத்துள்ளார்.
அப்போது அவர், “எங்கள் காட்டேஜில் ஜாலியாக இருக்க அழகான பெண்கள் இருக்கிறார்கள்.” என உள்ளே அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரை ராஜ்குமாரிடம் அறிமுகப்படுத்தியுள்ளார். “2,000 ரூபாய் கொடுத்தால் பெண்களை வரவழைக்கிறோம்.” என்று கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சந்தோஷ், இதுகுறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் மேட்டுப்பாளையம் போலீஸார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். பிறகு ராஜ்குமார், ராஜ் சுந்தர், ஒரு பெண் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தினர்.
அவர்கள் இருவரையும் 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கிருந்து மீட்ட பெண்ணை பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.