​தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சண்முகசுந்தரபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 10 பேர் காரில் சபரிமலைக்கு சென்று தரிசனம் முடித்து ​நேற்று நள்ளி​ரவு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.​ ​​​குமுளி மலைச் சாலையில் உள்ள இ​​ரைச்சல் பாலம் அருகே வந்தபோது ​திடீரென ​கார் கட்டுப்பாட்டை இழந்தது. காரை கட்டுப்படுத்த முடியாததால் ​இவர்களது கார் சுமார் 50​ ​அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

மீட்ப்புப்பணி

​தகவல் அறிந்து வந்த ​தமிழக-கேரள மாநில போலீ​ஸார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சுமார் 50அடி பள்ளத்தில் உள்ள ​​முல்லைப் பெரியாறு நீர் செல்லும் ராட்சத குழாய்க​ளான ​​​பென்ஸ்டாக் குழாய்களுக்கு இடையே​ ​சிக்கியிருந்த காருக்குள் இருந்த அய்யப்ப பக்தர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

அதில் ​​சிவக்குமார் (45)​, வினோத் (43)​, நாகராஜ் (50)​, கோபால கிருஷ்ணன் (42)​, கன்னிச்சாமி​​, கலைசெல்வன்​, தேவதாஸ்​ ஆகிய 7 பேர் ​நிகழ்விடத்திலேயே உயிரிழந்திருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். முனியாண்டி​ என்பவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.  ​ராஜா மற்றும் ஹரிஹரன் என்ற 7 ​​வயது சிறுவன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்​டு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து மீட்புப் பணி

விபத்தில் உயிரிழந்த ​ஐயப்ப பக்தர்களின் உடல்கள் மீட்கப்பட்டு அனைவரது சடலங்கள் ​பிரேதப்பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.​ ​​இதையடுத்து விபத்துக்குள்ளான கார் கிரேன் மூலம் மீட்கப்பட்டது. மேலும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே பார்வையிட்டார்.‌​ ​இந்த விபத்து குறித்து குமுளி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.