கீரனூர் அருகே கணவன் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே தெற்குதுவரவயல் கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு (31) என்பவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அவரது உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.

image

அப்போது திருநாவுக்கரசரின் உடலை பார்த்த அவரது மனைவி வினிதா (22) அதிர்ச்சியில் மயங்கி கீழே விழுந்துள்ளார். .உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள் கீரனூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்த நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அவரது உறவினர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனிடையே வினிதாவின் உடல் உடற்கூறு ஆய்வு பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், அவர் அதிர்ச்சியில் உயிரிழந்தாரா அல்லது விஷம் அருந்தி உயிரிழந்தாரா என்பது குறித்து உடற்கூறு ஆய்வு பரிசோதனைக்கு பின்பே தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

image

திருநாவுக்கரசிற்கும் வினிதாவிற்கும் திருமணம் ஆகி நான்கு வருடங்கள் ஆன நிலையில். இரு குழந்தைகள் உள்ளனர். இச்சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து கீரனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.