சமூக வலைதளங்களில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் பட்டியலினத்தவர் குறித்து ஆபாசமாக பேசிய புகாரில் பாஜக பிரமுகரை SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருநின்றவூர், அடுத்த கொசவம்பாளையம், கொட்டம்மேடு பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (32). தொழில் நிறுவனங்களுக்கு ஆட்களை அனுப்பும் தொழில் செய்து வரும் இவர், தமிழக முதல்வர் ஸ்டாலின் பற்றி சமூக வலைதளத்தில், ஆபாச வார்த்தைகளால் திட்டி வீடியோ வெளியிட்டிருந்தார்.

image

மேலும் தனது சமூகத்தைச் சேர்ந்த உறவினர் பெண் ஒருவர் பட்டியலினதவரை காதல் திருமணம் செய்து கொண்டார் எனக் கூறி பட்டியலினதவர்களை தகாத வார்த்தைகளில் பேசி அதனை சில தினங்களுக்கு முன்னர் வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த காட்சிகள் வேகமாக பரவியதைத் தொடர்ந்து பலரும் இணையத்தில் தமிழக காவல்துறை வுயுபு செய்து நடவடிக்கை எடுக்கும்படி கோரி இருந்தனர்.

இந்தநிலையில், இந்த வீடியோ பதிவு பற்றி திருவள்ளூர் மத்திய மாவட்ட கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரேம் ஆனந்த் என்பவர் முதல்வர் குறித்து அவதூறு பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில்SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டம், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், IT ACT  உள்ளிட்ட சட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து தேடிவந்தனர்.

image

இதையடுத்து தலைமறைவாக இருந்த பூபதி வெங்கடேசனை திருநின்றவூர் காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான காவலர்கள் ஆவடி அருகே கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

முதல்வர் குறித்தும் பட்டியலினதவர்கள் குறித்தும் கொச்சையாக பேசி வீடியோ பதிவிட்ட பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.