வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

‘காலர் டோனுக்கும்’, ‘ரிங்க் டோனுக்கும்’ வித்யாசம் தெரியாதவர் வித்யாசாகர். அவர், தன் மாப்பிள்ளையிடம் ஆர்வமாகக் கேட்டார், ‘மாப்பிள்ளை, எனக்கு யாராவது ஃபோன் பண்ணினா அவர்களுக்கு ‘பொன்னியின் செல்வன்’ ‘பொன்னிநதி, பாட்டு கேட்கணும்! அதுக்கு நான் என் ஃபோன்ல என்ன பண்ணனும்?’ என்றார்.

மாமா, நீங்க அந்தப் பாட்டைக் கேட்க, ஆசைப் பட்டாச் சொல்லுங்க, வச்சுத்தரேன். அதைவிட்டுட்டு, உங்களுக்குப் ஃபோன் பண்றவங் களுக்குக் கேட்க, நீங்க ஏன் மாமா வீணாப் பணத்தைச் செலவு செய்யறீங்க?!’ உங்க காசு தானே வீணாப் போகும்? அவங்களுக்கு வேணும்னா அவங்க யூடியூப் அது இதுன்னு எத்தனையோ மீடியா இருக்கே, அதுல கேட்டுட்டுப் போகட்டுமே!’’ என்றார்.

சில நிமிடங்கள் ஆழ்ந்து யோசித்தார் வித்யாசாகர். ‘ம்ம்ம்… மாசம் லட்சக் கணக்குல ஃபாரின் காசு சம்பாதிக்கிற மாப்பிள்ளையே ஒவ்வொரு பென்னி செலவுக்கும் யோசிக்கும் போது, நாம் பென்ஷனரா இருந்துட்டு, எதுக்கு ஊதாரித்தனமா காசை வீணாக்கணும்?!’ அவர் சொல்றது கரெக்ட் தானே?! யாரோ பாட்டுக் கேட்க, நான் என் காசைச் செல்வளிக்கணுமா?’ கூடாது!’ என்று முடிவுக்கு வந்தார்.

‘ம்… புடிச்சாலும் புடிச்சிருக்கோம். புளியங்கொம்பான மாப்பிளையைத்தான் புடிச்சிருக்கோம்!. நம்ம மாப்பிள்ளை, கோவில் கட்டின ‘பொன்னியின் செல்வன்’ இல்லைனாலும் ஒவ்வொரு பென்னியையும் யோசிச்சு எச்சரிக்கையாச் செலவு செய்யற ‘பென்னியின் செல்வன்’ என்று நினைத்துப் பெருமைப் பட்டுக் கொண்டார்.

வளர்கவி, கோவை

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.