இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் இருபது ஓவர் போட்டி இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வந்துள்ள தென்னாப்பிரிக்க அணி மூன்று ஆட்டங்கள் கொண்ட இருபது ஓவர் தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல்போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது.

Image

இந்திய அணியைப் பொறுத்தவரை ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக் பேட்டிங்கில் அசத்தி வருகின்றனர். ஆனால் பந்துவீச்சு கவலை அளிக்கும் வகையில் உள்ளது. உலகக்கோப்பை முன்பாக பந்துவீச்சில் தயாராக இந்த தொடர் வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Image

பேட்டிங், பந்துவீச்சில் பலமாக உள்ள தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் எனவும் கருதப்படுகிறது. குறிப்பாக பேட்டிங்கில் ஹென்ட்ரிக்ஸ், கிளாஸன், குவின்டன் டி காக், லுங்கி நிகிடி, ஷம்ஸி, ரபாடா சிறப்பான பார்மில் இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலமாக உள்ளது.


இந்த இரண்டு அணிகளும் இருபது ஓவர் உலகக்கோப்பையில் ஒரே பிரிவில் இடம்பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார்.

Image

இரு அணிகளின் ஆடும் லெவன்:

இந்திய அணி: ரோஹித் ஷர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர் ), தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், அர்ஷ்தீப் சிங்.

தென் ஆப்பிரிக்க அணி: குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர் ), டெம்பா பவுமா (கேப்டன்), ரிலீ ரோசோவ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வெய்ன் பார்னெல், ககிசோ ரபாடா, கேசவ் மகாராஜ், அன்ரிச் நார்ட்ஜே, தப்ரைஸ் ஷம்சி.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.