இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கூடலுரைச் சேர்ந்தவர் தர்மராஜ் (23). இந்திய ராணுவத்தில் பணியாற்றி வரும் இவர், இருசக்கர வாகனத்தில் தனது நண்பரான லியோ சாம் (26) என்பவருடன் கூடலூர் அருகே உள்ள கம்பம் வந்துவிட்டு மீண்டும் கூடலூர் நோக்கி சென்றுள்ளார். அப்போது கூடலூரில் இருந்து கம்பம் நோக்கி நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் குமார் (33) என்பவர் இருசக்கர வாகனத்தில் கம்பம் நோக்கிச் சென்றபோது இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

image

இதில், இரண்டு இருசக்கர வாகனங்களில் பயணித்த மூவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் ராஜேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து வந்த கூடலூர் வடக்கு காவல்துறையினர் காயம் அடைந்த இருவரையும் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி லியோ சாம் மற்றும் தர்மராஜ் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

இதையடுத்து 3 உடல்களையும் கைப்பற்றிய கூடலூர் வடக்கு காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து இந்த விபத்து குறித்து கூடலூர் வடக்கு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

image

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே நேரத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.