தேங்காய் விளைச்சலில் உலகில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. ஒரு தென்னை மரத்தில் இருந்து வரும் அனைத்து பொருட்களிலும் ஏதாவது ஒரு மருத்துவ குணம் இருக்கும். தேங்காயின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு அதைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலே தான் செப்டம்பர் 2 தேங்காய் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

தேங்காய் பூ

தேங்காய் என்றாலே அதில் பல நன்மைகள் உண்டு. அதிலிருந்து கிடைக்கும் பொருட்களின் ஒவ்வொன்றிலிருந்தும் ஒவ்வொரு விதமான சத்துக்கள் அடங்கியிருக்கும். அந்த வகையில் தேங்காய் பூவிலிருந்து கிடைக்கும் நன்மைகள் பற்றி இயற்கை மருத்துவர்(Naturopathy) டாக்டர் தீபாவிடம் பேசினோம். அவர் கூறியதாவது..

தேங்காய் பூ உருவாகும் முறை

“தேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கருவளர்ச்சியே . தேங்காய்பூவில், தேங்காய் மற்றும் இளநீரில் இருப்பதை விட அதிக சத்துக்கள் இருக்கின்றன.

தேங்காய் பூவை சாப்பிடும்போது கிடைக்கும் சுவைக்காகவே மக்கள் அதிகம் அதை விரும்புகிறார்கள். தேங்காய் பூவிலிருந்து பல ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன.

தேங்காய்

தேங்காயின் உள்ளே இருக்கும் தண்ணீர்தான் தேங்காய் பூவாய் மாறுகிறது. முதலில் ஒரு சாக்குப்பையில் சிறிது மண் அதன் மேல் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அதனுள்ளே தேங்காய்களை காற்று படாதவாறு வைக்க வேண்டும். மூன்று மாதங்கள் அதை திறக்காமல் அப்படியே விட்டுவிட வேண்டும். பிறகு, அதை இரு துண்டாக பிரித்து பார்த்தால் தேங்காயின் உள்ளே முழுவதும் தேங்காய் பூ உருவாகியிருக்கும். இதை தேங்காய் முட்டை என்றும் சொல்வதுண்டு. ஏனென்றால், இதில் சுவையும், ஆரோக்கியமும் அதிகமாக இருக்கிறது.

தேங்காய் பூ சிறிது வளர்ந்த நிலையில்

தேங்காய் பூவிலிருந்து கிடைக்கும் நன்மைகள்

தேங்காய் பூவில் முக்கியமாக நார் சத்தும், நீர் சத்தும் அதிகமா இருக்கிறது. தற்போது இருக்கும் காலநிலைக்கு இந்த சத்துக்கள் மிகவும் முக்கியமானவை.

நார் சத்து இருப்பதால் செரிமான தன்மையை அதிகப்படுத்தி மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. நீர் சத்தினால் நம் உடலில் உள்ள தண்ணீரின் அளவை சமமாக வைத்திருக்க உதவுகிறது.

தேங்காய் சம்பந்தப்பட்ட அனைத்து பொருட்களிலும் லினோலெனிக் அமிலம் இருக்கிறது. இது ஆன்டிஆக்ஸிடென்ட் மட்டும் அல்லாமல் நம் உடம்பிற்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய ஒரு கலவையாகவும்(compount) இருக்கும்.

கோடைகாலங்களில் நமக்கு ஏற்படும் முக்கிய பாதிப்புகளில் ஒன்று சிறுநீரகக்கல் பாதிப்பு. இதனை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் பாதிப்பில் இருந்து தடுக்கலாம். இந்த தேங்காய்ப் பூ நம் சிறுநீரகத்தையும் பாதுகாக்கக்கூடியது. இதில் இருக்கும் தேங்காய் கருவின் மூலம் நம் உடலில் உள்ள செல்கள் அனைத்தும் புத்துணர்ச்சி பெற்று சிதைவு ஆகாமல் பாதுகாக்கிறது. அதனால், சிறுநீரக நோய் மற்றும் சிறுநீர்பையில் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கவும் பயன்படுகிறது.

இளமையை மீட்டு தரும்..

இந்த தேங்காய் பூவில் ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகமாக இருப்பதால் நம் உடலில் உள்ள செல்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் அளவை அதிகமாகவும், நோய்யெதிர்ப்பு சக்தியை கூட்டுவதற்கும் உதவுகிறது.

தேங்காய் பூ

இதனுடைய முக்கியமான தன்மை நம் உடம்பில் உள்ள செல்களை புதுப்பிப்பதால் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கும் உதவியாக இருக்கும். நம் உடம்பில் உள்ள பிரீ ரேடிக்கல்சை வெளியேற்றும். அதாவது, வளர்சிதை மாற்றங்களுக்கு பிறகு நம் செல்களில் இருந்து வெளியேறக்கூடிய கழிவுகள் உடல்லையே தங்கும் நிகழ்வு தான் பிரீ ரேடிக்கல்ஸ். இது நாளடைவில் அப்படியே நம் உடம்பிலேயே இருக்கும் போது ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் (oxidative stress) ஏற்படும். அதனால் சீக்கிரம் வயதான தோற்றம் ஏற்படலாம். செல்களில் சிதைவு ஏற்படுவதால் மூட்டு வாதம், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், ரத்த குழாயில் அடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. பிரீ ரேடிக்கல்ஸ் லெவல் அதிகமாகும் போது புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. தேங்காய் பூவை சாப்பிடுவதால் உடம்பில் சிதைவு ஏற்படாமலும், பிரீ ரேடிக்கல்ஸை வெளியேற்றுவதற்கும், இளமையை மீட்டு தருவதற்கும் உதவியாக இருக்கும்.

நல்ல கொலஸ்ட்ரால்..

பொதுவாகவே, நமக்கு தேவையான கொலஸ்ட்ராலில் – நல்ல கொலஸ்டரால், கெட்ட கொலஸ்ட்ரால் என்று இருக்கும். இதில் கெட்ட கொலஸ்ட்ரால் ரத்த குழாயில் தங்கி அடைப்பு ஏற்பட்டு இதயநோய்கள் வரும் அபாயம் ஏற்படும். தேங்காய் பூ சாப்பிடுவதால் நம் உடம்பில் ஹை டென்சிட்டி லிப்போப்ரோடீன்(HDP) என்று சொல்லக்கூடிய நல்ல கொலஸ்ட்ரால் அதிகமாக்கும். யோகா பயிற்சி, மூச்சு பயிற்சி, நடைப்பயிற்சி மூலம் நமக்கு HDP அளவு அதிகமாகும். ஆனால், 10km நடைப்பயிற்சி மூலம் கிடைக்க வேண்டிய எபெக்ட் இதை சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும். மேலும், கொழுப்பு நம் உடம்பில் தங்காமல் மலம் மூலமாக வெளியேற்றிவிடும். அதனால், மாரடைப்பு வராமல் தடுக்கும்.

தேங்காய் பூவில் காப்பர், அயன், ஜிங்க் அதிகமாகவே இருக்கிறது. அதனால், சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை அதிகமாக்குகிறது. கொழுப்பு அமிலம்(fattiacid) குறைவாகவே இருக்கிறது. அதனால் தான் நல்ல கொலஸ்ட்ரால் நம் உடம்பிற்கு நல்லது என்று சொல்கிறார்கள்.

தேங்காய் பூ

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கிறது..

தேங்காய் பூவில் ஆன்டிவைரல் (antiviral), ஆன்டி பாக்டீரியல், ஆன்டிபஃங்கஸ், ஆன்டிஇன்பிளம்மேட்ரி(anti inflammatery) போன்ற பல நச்சுயிரிகளுக்கு எதிராக செயல்பட கூடிய திறன் இருக்கிறது. உடலில் உள்ள செல்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை (minerals) அதிகரிக்க செய்கிறது.

நீரிழிவு நோயாளிகள் இதனை அதிகமாகவே எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில், அவர்களின் உடம்பில் இன்சுலின் அளவை அதிகரிக்கச்செய்கிறது. நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி சிறுநீர் கழித்து கொண்டும் உடல் சோர்விலும் இருப்பார்கள். அவர்களுக்கு பசி அதிகமாகவும் இருக்கும். இவர்கள் தேங்காய் பூவை எடுத்துக்கொள்வதால் அதில் இருக்கும் நார்ச் சத்தின் மூலம் உணவு உண்ட திருப்தியான உணர்வு அவர்களுக்கு இருந்துகொண்டே இருக்கும். அதனால் அவர்கள் அதிகமான உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் உடல் அளவை கட்டுக்குள்(body meganism) வைத்துக்கொள்வதற்கு உதவியாக இருக்கும். இதை நார் சத்து அதிகமாகவும், கார்போஹைட்ரைட் குறைவாகவும் இருப்பதால் நம் உடலில் உள்ள பீட்டா செல்களில் செயலாக்கம் ஏற்பட்டு நம் கணையத்தில் இருந்து இன்சுலின் அளவை அதிகமாக சுரக்க வைத்து ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

கர்ப்பிணிகளுக்கு சிறந்த சத்து…

பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் பாதிப்புகளான முகப்பரு, தடிப்பு(rashes), கருவளையம், மற்றும் சுருக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும். முகத்தளர்வுகளையும் (loose skin) தடுக்கும். தேங்காய் பூவை தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டால் நம் இளமையை பராமரிக்கவும் உதவும். இதில் செலினியம் அதிகமாக இருப்பதால் முகப்பொலிவிற்கும், அழகாக இருப்பதற்கும் உதவுகிறது.

தேங்காய் பூ

பெண்கள் கர்ப்ப காலங்களில் இதனை அதிகமாகவே எடுத்துக்கொள்ளலாம். குழந்தை பிறந்த பின்பு பாலூட்டும் தாய்மார்கள் இந்த தேங்காய் பூவை அதிகம் எடுத்துக்கொண்டால் அவர்களுக்கு பால்சுரப்பு அதிகமாகும். இதை தேனோடு கலந்து எடுத்துக்கொண்டால் கர்ப்ப காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் இடுப்புவலியை கட்டுப்படுத்தவும், பால்சுரப்பு அதிகரிக்கவும், கர்ப்பப்பையில் உள்ள கழிவுகளை அகற்றி சுத்தமாக்குவதற்கும் உதவியாக இருக்கும்.

உடல் எடையை குறைக்கவும் இது உதவியாக இருக்கும். தேங்காய் பூவை காலை மற்றும் மாலை நேரங்களில் டயட் உணவாக எடுத்துக்கொள்வதால் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகமாக்கி உடல் பருமனை பராமரிக்க உதவும்” என்று ஆலோசனை வழங்கினார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.