மணமேடையில் இருந்த மாப்பிள்ளையின் கையிலிருந்து தாலியை மணப்பெண்ணின் காதலன் கடைசி நொடியில் பிடுங்கிய அதிர்ச்சி சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த 24 வயது இளைஞரும், இளம்பெண்ணும் ஒரு ஆடம்பர ஹோட்டலில் வேலைசெய்து வந்துள்ளனர். அப்போது இருவருக்குமிடையே காதல் மலர்ந்திருக்கிறது. இருவரும் ஆழமாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்தப் பெண்ணுக்கு பெற்றோர்களால் வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அதனை ஏற்றுக்கொள்ள மனமில்லாத அந்த பெண், வெள்ளிக்கிழமை காலை தனது காதலனை திருமண மண்டபத்திற்கே வந்து திருமணத்தை நிறுத்தி தன்னை அழைத்துச் செல்லுமாறு மெசேஜ் அனுப்பியிருக்கிறார். அதனை நம்பிய அந்த இளைஞரும் மண்டபத்திற்கு வந்துள்ளார்.

image

சினிமா, சீரியல்களில் வருவதுபோல் திருமண நேரத்தில் தாலியை கட்டி, அனைவரும் ஷாக்காகி நிற்கும் நேரத்தில் காதலியை மனைவியாக்கி கெத்தாக வெளியேறலாம் என்று காதலன் திட்டமிட்டிருக்கிறார் போலும். அதன்படி, முகூர்த்த நேரத்தில் தாலிகட்டவிருந்த மாப்பிள்ளையின் கையிலிருந்த தாலியை பிடுங்கிய காதலன் அதை தனது காதலியின் கட்ட முயன்றுள்ளார். ஆனால் அவர் நினைத்தது போல் அங்கிருந்த அனைவரும் ஷாக் ஆகாமல், தாலிகட்டபோன காதலனை தடுத்து அவருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். இதனால் அந்த இடத்தில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் மணப்பெண் அழைத்துதான் காதலன் மண்டபத்திற்கு வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து மணமகள் பெற்றோருடன் சண்டையிடவே, மாப்பிள்ளை வீட்டாரே திருமணத்தை நிறுத்திவிட்டனர். தொடர்ந்து பிரச்னை காவல்நிலையம் வரை சென்றுவிட்டது. இருதரப்பு வீட்டாரையும் அழைத்து போலீசார் பேசிய நிலையில், தற்போது காதலனுக்கே அந்த பெண்ணை திருமணம் செய்துவைக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.