ஆற்றில் குளிக்கச்சென்ற தந்தை மகள் இருவரும் நீரில் மூழ்கி தாயின் கண்முன்னே அடித்து செல்லப்பட்டு இறந்துபோன துயர சம்பவம் நெல்லை அம்பை அருகே நடந்துள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பை அடுத்த ஆலடியூர் அருகே, செட்டிமேடு இலங்கை தமிழர் முகாமில் உள்ள உறவினர் வீட்டிற்கு இலங்கை கொழும்பு பகுதியைச் சேர்ந்த துவான் மகன் இர்பான் முகமது (வயது 34), அவரது மனைவி ஜீட் மேரி சுசி, குழந்தைகள் இஷானா (வயது 8), இஷ்ரா ஆகியோர் கடந்த மாதம் வந்திருக்கின்றனர். மேலும் பெயிண்டிங் வேலை பார்த்துவந்த இர்பான் முகமது அம்பையில் தனது உறவினருடன் பெயிண்டிங் வேலையும் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

image

இந்நிலையில் இன்று இர்பான் முகமது அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் அப்பகுதியிலுள்ள தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்கச் சென்றுள்ளார். அப்போது அவருடைய 8 வயது மகள் இஷானாவை தண்ணீர் இழுத்துச் சென்றது. தன் மகளை தண்ணீர் இழுத்துச் செல்வதைக் கண்ட தந்தை இர்பான் முகமது மகளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் அவரும் ஆற்றில் குதித்துள்ளார். தண்ணீரின் வேகத்தை எதிர்கொள்ள முடியாத இருவரும் ஆற்றில் மூழ்கியுள்ளனர்.

image

அப்போது கரையில் இருந்த அவரது மனைவி மேரியும் அவர்களை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் மேரி கண்முன்னே கணவரும் மகளும் ஆற்றில் மூழ்கியவாறு அடித்து செல்லப்பட்டனர். அப்போது என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றுள்ளார் மேரி.

image

உடனே அம்பை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட இர்பான் முகமது உடலை மட்டும் கைப்பற்றினர். மேலும் தொடர்ந்து சுமார் 3 மணி நேர தேடலுக்கு பின் சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் சிறுமியின் உடல் மிதந்து ஒதுங்கியுள்ளது.

image

பின்னர் வி.கே.புரம் போலீசார், தந்தை – மகள் ஆகிய இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.