ஐரோப்பாவில் நிகழ்ந்துவரும் மிக மோசாமான வறட்சி காரணமாக டானூப் நதி முதல்முறையாக வறண்டு கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 1944-ம் ஆண்டு நடந்த இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் போர்க் கப்பல்கள் பல டானூப் நதி வழியாக ரஷ்யப் படையிலிருந்து பின்வாங்கின. அப்போது ஏற்பட்ட போர் சூழலால் பல கப்பல்கள் போர் ஆயுதங்கள், வெடிபொருள்களுடன் டானூப் நதியில் மூழ்கின.

இரண்டாம் உலகப்போரில் மூழ்கிய கப்பல்கள்

இந்த நிலையில், ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உட்பட ஐரோப்பாவின் பிற பகுதிகளில், பல மாதங்களாக வறட்சி மற்றும் அதிக வெப்பநிலை நீடிக்கிறது. இதனால் அனைத்து நதிகளின் நீர்மட்டம் குறைந்ததால் நதிப்போக்குவரத்து சீர்குலைந்திருக்கிறது. எனவே, செர்பியாவில் உள்ள டானூப் நதி வழித்தடத்தை திறந்து வைக்க அதிகாரிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

இரண்டாம் உலகப்போரில் மூழ்கிய கப்பல்கள்

இதனால், தற்போது ஆற்றங்கரையின் குறுக்கே வெளித்தெரியும் ஜெர்மனி போர்க்கப்பல்களின் கோபுரங்கள், மற்றும் மேலோடுகள் காணப்படுகின்றன.

இதனால், நதியின் வழியாகக் கப்பல் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம், செர்பிய அரசாங்கம் அந்த கப்பல்களை நீக்குவதற்கும், வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருட்களை அகற்றுவதற்கும் ஒரு டெண்டரை அறிவித்திருக்கிறது. அந்த டெண்டரின்படி செயல்பாட்டின் செலவு 29 மில்லியன் யூரோக்கள் (30 மில்லியன் டாலர்) என மதிப்பிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. .

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.