சென்னை பெருநகர காவல்துறை சார்பில் `போதை தடுப்புக்கான நடவடிக்கை’ எடுக்கப்பட்டுவருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் போதைப்பொருள் கடத்தி வந்தவர்கள், பதுக்கி வைத்திருந்தவர்கள், விற்பனை செய்தவர்கள் என 12 பேரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். இவர்களிடமிருந்து 8.6 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டிருக்கிறது.

கைப்பற்றப்பட்ட போதைபொருள்

மேலும், 15 கிராம் மெத்தம் பெட்டமைன், 1,200 மாத்திரைகள் மற்றும் LSD ஸ்டாம்புகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஆந்திராவிலிருந்து சென்னைக்குக் கஞ்சா கடத்திவரப்படுவதாக கொருக்குப்பேட்டை பகுதி காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில், கொருக்குப்பேட்டை ஏகாம்பரம் தெரு சந்திப்பில் சந்தேகிக்கும் வகையில் நின்றுகொண்டிருந்த இருவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் வைத்திருந்த பையில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

கைப்பற்றப்பட்ட போதைபொருள்

இதனையடுத்து அந்த இருவரும் கைதுசெய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இந்த விசாரணையில், அவர்கள் இருவரும் ஆந்திராவிலிருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்திவந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 16 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.