டெஸ்லா நிறுவனத்தின் 54 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை எலான் மஸ்க் விற்றுள்ளார்.
உலகத்தின் பெரும் பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளில் பெரும் பங்கினை விற்றுள்ளார். கடந்த ஏப்ரல் மாதத்தில் 8.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள டெஸ்லா பங்குகள் விற்கப்பட்டன. அப்போது ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவில் மஸ்க் இருந்ததாகவும் அதற்காக பணம் திரட்ட தான் அந்தப் பங்குகள் விற்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியான. ஆனால் அவர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை சமீபத்தில் கைவிட்டார்.
இந்நிலையில் எலான் மஸ்க் மீண்டும் 7 பில்லியன் டாலர் மதிப்புள்ள டெஸ்லா நிறுவன பங்குகளை மீண்டும் தற்போது விற்றுள்ளார். இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 54 ஆயிரம் கோடியாகும். ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு இடையில் டெஸ்லா நிறுவனத்தின் சுமார் 79 லட்சத்திற்கும் மேற்பட்ட பங்குகளை அவர் விற்றுள்ளார். மேலும் கடந்த 10 மாதங்களில் மட்டும் 3 ஆயிரத்து 200 கோடி டாலர் மதிப்பிலான பங்குகளை எலான் மஸ்க் விற்றுள்ளார்.