ஒவ்வொரு ஆண்டும் மும்பையில் ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெறும். இதில் இந்தியா முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொள்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நேற்று இரவு மும்பை பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் உள்ள ஜியோ வேல்டு சென்டரில் நடந்தது.

ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் மாநிலத்திற்கு ஒருவர் என்ற வீதத்தில் மொத்தம் 30 பேர் கலந்து கொண்டனர். போட்டியின் நடுவர்களாக நடிகை மலைகா அரோரா, நேகா துபியா, தினோ மோர்யா, டிசைனர் ரோஹித் காந்தி, ராகுல் கன்னா, நடன இயக்குனர் ஷிமாக், இந்திய கிரிக்கெட் அணியின் மகளிர் அணி முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்துகொண்ட பெண்களுக்குப் பல்வேறு விதமான போட்டிகள் வைக்கப்பட்டன.

சினிஷெட்டி

இறுதிச்சுற்று நேற்று இரவு நடந்தது. இதில் கர்நாடகா மாநிலம் மங்களூரை சேர்ந்த சினி ஷெட்டி பெமினா மிஸ் இந்தியாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ராஜஸ்தானைச் சேர்ந்த ரூபல் ஷெகாவத் இரண்டாவது இடத்தையும், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சிதனா சவுகான் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். மும்பையில் பிறந்த சினி ஷெட்டி தற்போது கர்நாடகாவில் வசிக்கிறார். நடனக் கலைஞராக இருக்கும் சினி ஷெட்டி உலக அளவில் நடக்கும் மிஸ் இந்தியா அழகிப்போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளார். சினி ஷெட்டி தனது நான்காவது வயதில் நடனம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்.

அழகிப்போட்டியில் கலந்து கொண்டவர்களிடம் நேர்முகத் தேர்வும் நடத்தப்பட்டது. அதில் அமெரிக்காவில் தற்போது கொண்டு வரப்பட்ட கருத்தடை கட்டுப்பாட்டு சட்டம் குறித்து கேட்கப்பட்டது. இதற்கு கருத்தடை செய்வது பெண்களின் உரிமை என்றும், பெண்களின் உடல் அவர்களின் உரிமை என்றும் சினி ஷெட்டி பதிலளித்து நடுவர்களின் பாராட்டைப் பெற்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.