விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு 37 கோடி ரூபாய் செலவில் கண்ணாடி இழைப்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துறை சார்ந்த பணிகளை விரைவுப்படுத்துவது குறித்து பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  மதுரவாயல் துறைமுகம் இடையேயான உயர்மட்ட மேம்பால பணிகளுக்காக ஏற்கனவே நில எடுப்பு பணிகள் முடிவடைந்துள்ளன.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விரைவில் தொடங்க உள்ள நிலையில். தமிழக அரசு இத்திட்டத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும் எனத் தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டம் விவேகானந்தர் பாறையில் இருந்து, திருவள்ளுவர் சிலைக்கு செல்வதற்கான கண்ணாடி இழை பாலம் அமைப்பதற்கான டெண்டர் பணிகள் முடிந்துள்ளதாகவும், விரைவில் பாரம் அமைவதற்கான பணிகள் தொடங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

image

மேலும் மதுரையில் கலைஞர் நூலக பணிகள் விரைந்து நடைபெற்று வருவதாகவும் விரைவில் அந்தப் பணிகள் முடிவடையும் எனவும் அவர் தெரிவித்தார். தமிழக அரசின் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை மற்றும் சாலைப் பணிகளுக்கான, நில எடுப்பு பணிக்கு என சிறப்பு நில எடுப்பு கோட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் நில ஆணையருடனான கூட்டம் நடைபெற்று முடிவடைந்து உள்ளது.

முதல் கட்டமாக எந்தெந்த இடங்களில் நில எடுப்பு பணிகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் நில எடுப்பு பணிகள் தாமதம் ஏற்படும் பட்சத்தில் அதற்கான திட்ட மதிப்பீடு அதிகரித்து தமிழக அரசுக்கு நிதி சுமை ஏற்படுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சாந்தோமில் இருந்து கிண்டி வரை மேம்பாலம் அமைப்பதற்கான பணிகளுக்கு திட்ட அறிக்கை தயாரிக்க கூடிய பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.