தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே தனியார் கல்லூரிப் பேருந்து மோதி, பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் தேவாரத்தைச் சேர்ந்தவர் சந்துரு (16). இவர் உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தற்போது நடைபெற்று வருவதால், தேர்வு எழுதுவதற்காக காலையில் தேவாரத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து பள்ளிக்கு புறப்பட்ட மாணவர் சந்துரு, உத்தமபாளையத்தில் இருந்து ராயப்பன்பட்டி செல்லும் வழியில் உள்ள புதிய புறவழிச் சாலையைக் கடக்க முயன்றார்.

அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த தனியார் கல்லூரிப் பேருந்து ஒன்று மோதியதில் மாணவர் சந்துரு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உத்தமபாளையம் காவல்துறையினர், மாணவர் சந்துருவின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

image

இதனைத்தொடர்ந்து உத்தமபாளையம் காவல்துறையினர், விபத்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பதினொன்றாம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதுவதற்காக ஆவலாக பள்ளிக்குச் சென்ற மாணவர் கல்லூரிப் பேருந்து மோதி பரிதாபமாக உயிரிழந்த துயர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.