எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

ஜெகதாப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச்சென்றனர். நெடுந்தீவு அருகே இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை, ஒரு விசைப்படகையும் அதில் இருந்த 3 மீனவர்களையும் கைது செய்தது.

கைது செய்யப்பட்ட 3 மீனவர்களையும் இலங்கையிலுள்ள மயிலிட்டி துறைமுகத்துக்கு அந்த நாட்டின் கடற்படை கொண்டு சென்றது. இலங்கை கடற்படையால், தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்களை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

image

சில நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரம், மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து  சென்று நெடுந்தீவு மற்றும் தனுஷ்கோடி அருகே 2 விசைப்படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 16 மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்து எல்லை தாண்டி வந்ததாக கூறி, மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு சென்றது.அவர்களை வருகின்ற ஏப்ரல் 7-ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.