அமெரிக்கா இனி பல முன்னோடி தொழில்நுட்பங்களில் ஆதிக்கம் செலுத்தப் போவதில்லை என தெரிவித்துள்ளார் அந்நாட்டின் மேலவையின் செல்வாக்கு மிக்க உறுப்பினர் ஒருவர். அதே நேரத்தில் இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் அதில் ஆதிக்கம் செலுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
“தொழில்நுட்பம் மிகவும் மேம்பட்டுள்ள நிலையில் நாம் இருக்கிறோம். இதற்கு முன்னர் வரை அமெரிக்கா தொழில்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆனால் இனி அப்படி இருக்க வாய்ப்புகள் இல்லை. ஹைப்பர்சோனிக்கை பொறுத்த வரையில் சீனா, இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளே முன்னணியில் நடை போடுகிறது.
இதுவரையில் உலகில் இரண்டு தரப்புக்கு இடையே மட்டுமே இருந்து வந்த அணு ஆயுதப் போட்டி முத்தரப்பு போட்டியாக மாற உள்ளது. அமெரிக்கா, சீனா, ரஷ்யா என அந்த நிலை மாறுகிறது” என தெரிவித்துள்ளார் மேலவை உறுப்பினர் ஜேக் ரீட்.