உக்ரைனில் இருக்கும் தமிழ்நாட்டு மாணவர்களை மீட்பதில் உள்ள சிக்கல் என்ன? மீட்பு பணியின் தற்போதைய நிலை குறித்து சிறப்பு அதிகாரி ஜெசிந்தா கூறிய கருத்துகள்…
இது குறித்து பேசிய உக்ரைனில் உள்ள மாணவர்களை மீட்பதற்கான ஒருங்கிணைப்பு சிறப்பு அதிகாரி ஜெசிந்தா, ” உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவனை மீட்டெடுப்பதற்கான அனைத்துவிதமான நடவடிக்கைகளும் அரசு எடுத்து வருகிறது. இதுவரை 144 மாணவர்கள் வெவ்வேறு விமனத்தில் தமிழகம் வந்துள்ளனர்.
உக்ரைன் எல்லைப் பகுதிக்கு வரக்கூடிய மாணவர்களிடம் தொடர்ச்சியாக பேசி வருகிறோம்., 2200 மாணவர்களின் அங்கு இருப்பது கண்டறிந்து அவர்கள் குறித்த விவரங்களை மத்திய அரசிடம் தெரிவித்துள்ளோம். அங்கு இருக்கும் மாணவர்களுடன் மற்ற மாணவர்களும் இணைந்து பேசுவதற்கான வாட்ஸ் அப் குழு உருவாக்கப்பட்டு அவர்களுடன் தொடர்ச்சியாக அரசும் தொடர்பில் இருந்து வருகிறது” என தெரிவித்தார்