தஞ்சை மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ தற்போது பதிந்துள்ளது.

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகபாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில், முதல் மனைவிக்கு பிறந்த மகளை தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் மைகேல்பட்டியில் உள்ள தனியார் பள்ளியொன்றில் சில ஆண்டுகளுக்கு முன்னர் 8-ஆம் வகுப்பில் சேர்த்துள்ளார் முருகானந்தம். பள்ளியின் அருகில் உள்ள செயின்ட் மைக்கேல் மகளிர் விடுதியில் தங்கி படித்த அம்மாணவி, இந்த வருடம் 12ஆம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். இவர் கடந்த மாதம் தற்கொலை செய்து இறந்திருந்தார்.

image

இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, மாணவியின் தற்கொலையை 305 – குழந்தைகளை தற்கொலை செய்ய தூண்டுதல், 511- குற்றம் செய்ய முயற்சித்தல், சிறார் நீதி சட்டப்பிரிவுகளான 75, 82(1) ஆகிய பிரிவுகளின் கீழ் தற்போது வழக்குகளாக பதிவு செய்துள்ளன. மாணவி தங்கியிருந்த பெண்கள் விடுதியின் வார்டன் சகாயமேரி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று (பிப்ரவரி 14) இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்திய செய்தி: “அடுத்த சீசனில் தோனி விளையாடலனா நானும் விளையாடல..” – வைரலாகும் ரெய்னாவின் பழைய பேட்டி

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.