தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதன் காரணமாக திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக ஆகிய அரசியல் கட்சித் தலைவர்கள் மும்முரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்திற்கு மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதனால் அவற்றை பின்பற்றி , திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பரப்புரை, பொதுக்கூட்டங்கள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. வேட்பாளர்கள், மாவட்ட நிர்வாகிகளுடன் வீடு வீடாக பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர். வேட்புமனு தாக்கல் முடிந்ததும், பிரசார பணிகள் வேகம் பெறும்.
Also Read: `முடிவுக்கு வராத `பங்கீடு’ பஞ்சாயத்து!’ – கூட்டணி கட்சிகளிடம் கறார் காட்டுகிறதா திமுக?