தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் சுமார் 1.30லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 19,280 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதிசெய்யப்படுவோரின் மொத்த எண்ணிக்கை 33,45,220 என்றாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 25,056 பேர் தமிழ்நாட்டில் கொரோனாவிலிருந்து குணமடைந்ததையடுத்து, தற்போது கொரோனா சிகிச்சையிலிருப்போரின் மொத்த எண்ணிக்கை 1,98,130 என்றாகியுள்ளது. கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். 1080 லிருந்து 1030 ஆக ஐசியுவிலிருப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விகிதம் 18.3சதவீத்திலிருந்து 16.2. ஆக குறைந்துள்ளது.