கொரோனாவின் புதிய திரிபான ஒமைக்ரான் பரவல் தொடர்பான அச்சம் காரணமாக பிரதமர் மோடியின் அமீரகப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

துபாய் எக்ஸ்போவில் பங்கேற்பதற்காக வருகிற 6-ஆம் தேதி பிரதமர் மோடி துபாய் செல்ல இருந்தார். 2022-ஆம் ஆண்டில் பிரதமரின் முதலாவது வெளிநாட்டு பயணமாக இந்த துபாய் பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் எதிர்பாரா சூழ்நிலை காரணமாக தற்போது பிரதமரின் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

image

இந்தப் பயணத்தின்போது இந்தியா – ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையேயான விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தை இருநாட்டு தலைவர்களும் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், பிரதமர் மோடியும் ஐக்கிய அரபு அமீரக தலைவர்களும் விவாதிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது அந்தப் பயணம் தள்ளிப்போயுள்ளது.

சமீபத்திய செய்தி: ”செல்போனில் மிரட்டுகிறார்கள்; என் உயிருக்கு ஆபத்து”- காவல்துறையிடம் அன்னபூரணி புகார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.