முப்படைகளின் கூட்டு தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் மறைவுக்கு அமெரிக்கா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளன.
 
இந்தியாவின் முதல் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவத்தை நவீனமாக மாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டவர் என அமெரிக்க ராணுவம் வெளியிட்ட இரங்கல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வலுவான நண்பராகவும், இருநாட்டு ராணுவ கூட்டுறவை விரிவுப்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றியவர் என்றும் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
பிரிட்டன் சார்பில் அந்நாட்டின் தூதர் அலெக்ஸ் எல்லீஸ் ட்விட்டரில் இரங்கல் வெளியிட்டுள்ளார். அதில், பிபின் ராவத்தின் மறைவு செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாகவும், தீரமிக்க வீரராகவும், ராணுவ விவகாரங்களில் மிகுந்த சாமர்த்தியம் கொண்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் நிக்கோலவ் தெரிவித்திருக்கும் இரங்கல் செய்தியில், அர்ப்பணிப்பு குணம் கொண்ட கதாநாயகனையும், மிகச் சிறந்த தேசப்பற்று கொண்டவரையும் இந்தியா இழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
 
image
பாகிஸ்தான் ராணுவ செய்தித்தொடர்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், தங்கள் நாட்டின் முப்படைகள் சார்பில் பிபின் ராவ்த் மற்றும் 13 பேரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போல், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளும் பிபின் ராவத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளன.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.