குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் வானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து குறித்த டைம்லைனை பார்ப்போம்.

காலை 11.45 மணி: Mi-17V5ரக ஹெலிகாப்டரில் கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து குன்னூர் வெலிங்க்டன் பயிற்சி மையத்திற்கு ராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்டது.

நண்பகல் 12.20 மணி: ஹெலிகாப்டர் நஞ்சப்ப சத்திரம், காட்டேரி அருகே விபத்து நடந்தது உறுதியானது. முப்படைத்தளபதி மற்றும் அவரது மனைவி பயணித்த தகவல் வெளியானது.

பிற்பகல் 1மணி: பயணித்தவர்களில் 4 பேர் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு தீயில் கருகிய நிலையில் மலைப்பாதையில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

மதியம் 2மணி: ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதியில் மீட்பு பணிகள் தீவிரம்

மதியம் 2.15மணி: ராணுவ ஹெலிகாப்டர் விபத்து; பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு!

மதியம் 2.20மணி: விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர் குறித்து மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை. ஹெலிகாப்டர் விபத்து மீட்புப்பணிகளை துரிதப்படுத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

மதியம் 2.30மணி: மீட்புப்பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக முதல்வர் ஸ்டாலின் கோவை செல்வதாக தகவல் வெளியானது.

மதியம் 3மணி: தரையிறங்க 5 நிமிடங்களே எஞ்சியிருந்த நிலையில் விழுந்து ஹெலிகாப்டர் நொறுங்கியதாக தகவல்

மதியம் 3.10 மணி: விபத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்யக் கோரி அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவு. நாடாளுமன்றத்திற்கு ராஜ்நாத் சிங் வருகை.

மாலை 4.50 மணி: ஹெலிகாப்டரில் பயணம் செய்த 14 பேரில் 13 உயிரிழந்துள்ளதாக ஏ.என்.ஐ தகவல்

மாலை5.10மணி: பாதுகாப்புக்கான அமைச்சரவைக்கூட்டம் மாலை 6.30 மணிக்கு நடைபெறும் என அறிவிப்பு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.