நாகாலாந்து துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு டெல்லியில் அஞ்சலி!
தலைநகர் டெல்லியிலிருக்கும் நாகாலாந்து இல்லத்தில், கடந்த சனிக்கிழமை அன்று பாதுகாப்புப் படையினரால் தவறுதலாக சுட்டுக்கொல்லப்பட்ட பொது மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இன்று இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்!
21-வது இந்திய – ரஷ்ய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ரஷ்ய அதிபர் புதின் இன்று இந்தியா வருகிறார். பிரதமர் மோடியை அவர் டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். மேலும் இந்திய பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்களும், ரஷ்ய பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் சந்தித்து, இரு நாடுகளுக்கும் பொதுவான பிரச்னைகள், இரு நாட்டு ஒப்பந்தங்கள் குறித்துப் பேசவிருக்கின்றனர். இந்தச் சந்திப்புகளின்போது 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவிருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, பாதுகாப்புத்துறையில் புதிய ரக ஆயுதங்கள் வாங்குவது தொடர்பாகவும் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.