ஜெர்மன் அதிபர் அஞ்சலோ மேர்க்கெல் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டில் அத்தியாவசியமற்ற கடைகள், கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்கு இடங்களுக்கு செல்ல தடுப்பூசி செலுத்தாத நபர்களுக்கு தடைவிதிக்கப்படுவதாக அறிவித்தார். ஆனால், சமீபத்தில் நோய்த்தொற்றிலில் இருந்து மீண்டவர்களுக்கு இந்த தடை நடவடிக்கைகள் பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.