தென் மாவட்டங்களில் அதிகனமழை பதிவாகி உள்ளது. தூத்துக்குடி, தென்காசி, நெல்லை மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அதே நேரத்தில் திருவாரூரில் மழை காரணமாக நாளைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதை புதிய தலைமுறை செய்தியாக வெளியிட்டிருந்தது.
அதோடு அந்த செய்தியை புதிய தலைமுறையின் சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டிருந்தது. இந்த நிலையில் ட்விட்டர் மாணவர் ஒருவர் புதிய தலைமுறை வெளியிட்ட அந்த செய்தியை ரீட்வீட் செய்திருந்தார். அதில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகானந்த் ரெட்டியையும் ‘டேக்’ செய்து “சார், விருதுநகரிலும் கனமழை பொழிந்து வருகிறது” என சொல்லி இருந்தார் அந்த பயனர்.
#BREAKING | திருவாரூரில் நாளை (26.11.2021) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு #TNRains | #SchoolLeave | #Thiruvarur pic.twitter.com/yyQ2ykJ0cj
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) November 25, 2021
அதை கவனித்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகானந்த் ரெட்டி, “விடுமுறை வேண்டி உங்கள் தொடர் பிரார்த்தனைகளுக்கு நன்றி. நம் மாவட்டத்திலும் அதிக மழை பொழிவு இருந்து வருகிறது தம்பி. அதனால் நாளை (26.11.21) மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை பயன்படுத்தி ஹோம்வொர்க்கை முடிக்கவும். ஆசிரியர்கள் சரிபார்ப்பார்கள். பாதுகாப்பாக இருங்கள்” என சொல்லி அதற்கு ரிப்ளை கொடுத்துள்ளார்.
மாவட்ட ஆட்சியரின் ரிப்ளை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.