புதுச்சேரியில் பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய ஆட்டோவை மீட்கச் சென்ற ஓட்டுனர் வெள்ளவாரி ஓடை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
புதுச்சேரியில் இன்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரத்தின் அனைத்து சாலைகளும் வெள்ளத்தில் முழ்கியுள்ளது. கன மழையால் வெள்ளவாரி ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில், சாலையில் நிறுத்தியிருந்த ஆட்டோவை வெள்ளம் சூழ்ந்ததால் மேடான பகுதியில் நிறுத்த ஓட்டுநர் கனகராஜ் (65) முயற்சித்துள்ளார். அப்போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட அவரை, அரைமணி நேரமாக அருகில் உள்ள கனகன் ஏரியில் தீயணைப்புத் துறையினர் தேடிவருகின்றனர்.