மக்கள், தேவையான பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ள மாநகராட்சி அறிவுறுத்தல்

அதிகனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை மக்கள் தங்களுக்கு தேவையான குடிநீர், பால், உணவு, காய்கறிகள் மாதிரியான பொருட்களை இரண்டு நாட்களுக்கு இருப்பு வைத்துக் கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி அறிவுத்தி உள்ளது.

இன்று மிக கனமழை… நாளை ரெட் அலர்ட்!

தமிழ்நாட்டில் தற்போது பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. கடந்த வாரம் மாநிலம் முழுவதும் பரவலாகப் பெய்த கனமழை காரணமாக வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் வெள்ளத்தால் தத்தளித்தன.

சென்னை மழை

இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக சென்னையில் நாளை அதி கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்தமானில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக மழைப்பொழிவு இருக்கும் என தெரிவித்திருக்கும் வானிலை ஆய்வு மையம், இது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப் பெறாது என கணிக்கப்பட்டிருப்பதாக நேற்று அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.