இ.பி.எஸ்ஸும் , நானும் தனித்தனியாக மக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் கொடுக்கிறோம். இதனால் தனியாக செயல்படுகிறார்கள் என்று கூறுவது ஏற்புடையதல்ல என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் சார்பில் பன்னீர்செல்வம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். எம்.எம்.டி.ஏ, எழும்பூர், துறைமுகம், ஆர்.கே.நகர் தொகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் காசிமேடு துறைமுகத்தில் மீனவர்களை சந்தித்து மழையால் சேதமடைந்த படகுகளை பார்வையிட்டார்.

image

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மழை வெள்ளத்தால் அனைவருக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காசிமேட்டில் 20 படகுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. மீனவர்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே  பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். சென்னையில் இன்னும் சில இடத்தில் மழைநீர் வடியாமல் இருக்கிறது. இதை வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

மேலும், “ அதேபோல் 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு அதிமுக பெரும் நடவடிக்கை எடுத்ததால் தான், தற்போது பெரும் மழை வெள்ளப் பாதிப்பில் இருந்து சென்னை தப்பியது. இ.பி.எஸ்ஸும் , நானும் தனித்தனியாக மக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் கொடுக்கிறோம். இதனால் தனியாக செயல்படுகிறார்கள் என்று கூறுவது ஏற்புடையதல்ல. மக்களை சந்திப்பது தான் முக்கியம். இதில் பாரபட்சம் என்பது பார்ப்பவர்கள் கண்ணில் தான் இருக்கிறது” என்றார்.

image

 உள்ளாட்சியில் ஊழல் செய்ததாக அதிமுக மீது விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என முதல்வர் பேசியுள்ளது குறித்த கேள்விக்கு ஓபிஎஸ் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

இதனைப்படிக்க…‘கழிப்பறையே பயன்படுத்தாத நமக்கு சுகாதார வளாகம் ஏற்படுத்தியுள்ளார் பிரதமர்’ – எல்.முருகன் 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.