கடந்த முறை 2018-ல் மெகா ஆக்ஷன் வந்தபோது ஒரு அணி 3 வீரர்கள் வரை தக்கவைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. Retention, RTM கார்டு சேர்ந்து அதிகபட்சமாக 5 வீரர்கள் வரை தக்கவைத்துக்கொள்ள முடியும். ஆனால், இந்த முறை நேரடியாக 4 வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ளலாம் என்றும், RTM முறை இல்லை என்றும் கூறப்பட்டிருக்கிறது. அந்த நால்வரில் அதிகபட்சமாக 3 இந்திய வீரர்கள் இருக்கலாம். வெளிநாட்டு வீரர்களில் இருவருக்கு மேல் தக்கவைக்க முடியாது. இந்த விதியின் அடிப்படையில் ஒவ்வொரு அணியும் யாரைத் தக்கவைக்கலாம் என்பதை இந்த வீடியோவில் விவாதித்திருக்கிறோம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் ஏன் தோனியை ரீடெய்ன் செய்யவேண்டும்?
ஹர்திக் பாண்டியா, இஷன் கிஷன், சூர்யகுமார் யாதவ் – இவர்களில் மும்பை இந்தியன்ஸ் ரீடெய்ன் செய்யப்போகும் அந்த ஒருவர் யார்?
பெங்களூரு ஏன் டி வில்லியர்ஸை தக்கவைக்ககூடாது?
பஞ்சாப் ஏன் இரண்டு வீரர்களுக்கு மேல் ரீடெய்ன் செய்யக்கூடாது?
எந்த வெளிநாட்டு வீரர்களை ராஜஸ்தான் ராயல்ஸ் விடவேண்டும்?
லக்னோ, அஹமதாபாத் அணிகள் வாங்கவேண்டிய மூவர் யார்?
இவை அனைத்தும் மேலே இருக்கும் அந்த வீடியோவில்…