தரம் மற்றும் நம்பிக்கையின் மறுபெயராக விளங்கும் ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், இந்தியாவின் மிகவும் நம்பகமான முன்னணி ஜுவல்லரி நிறுவனம் ஆகும். தலைமுறைகள் பல கடந்தும் தங்கம், வைரம், வெள்ளி, பிளாட்டினம் மற்றும் ராசிக் கற்கள் போன்றவற்றில் நவீன மற்றும் பாரம்பரிய ஆபரண நகைகளை வாடிக்கையாளர்கள் விரும்பும் வண்ணம் தரமாக வடிவமைத்து வழங்கி வருகின்றனர்.

ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் மக்களுக்கு தொடர்ந்து பலவகையில் உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் அடையார் புற்றுநோய் மையத்திற்கு தலா ரூ. 25 லட்சத்தை வசதிவாய்ப்பற்ற மக்கள் இலவசமாக அறுவை சிகிச்சை செய்துகொள்ளவும், மருத்துவ உபகரணங்கள் வாங்கவும் நன்கொடையாக அளித்துள்ளது. இது அந்நிறுவனம் தொடர்ந்து சமுதாயத்திற்கு அளிக்கும் தன்னலமற்ற சேவையை பறைசாற்றுகிறது.

Also Read: ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் – மூன்று `டைம்ஸ் பிசினஸ் விருதுகள்’ வென்று சாதனை!

இதுகுறித்து ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குனர் ஜி.ஆர் ‘அனந்த்’ அனந்தபத்மநாபன் கூறுகையில், “இந்த சேவையில் எங்களின் வாடிக்கையாளர்களுக்கும் முக்கியப் பங்குண்டு. அவர்களின் தொடர் ஆதரவினால் மட்டுமே இது சாத்தியம், அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!”

மேலும், ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குனர் திரு. ஜி.ஆர்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், “மக்களுக்கு தரமான மருத்துவ பராமரிப்பு அளிக்கும் பிரபலமான அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் அடையார் புற்றுநோய் மையத்திற்கு, அவர்கள் மேலும் பல சேவைகள் புரிய எங்களின் தாழ்மையான பங்களிப்பு இது!”

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.