மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டிலிருந்தே மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. எனவே 2020ஆம் ஆண்டிற்கான 2 அக விலைப்படி உயர்வு தவணைகள், 2021ஆம் ஆண்டிற்கான ஒரு அகவிலைப்படி உயர்வு தவணை ஆகியவற்றை வழங்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது. அதன்படி ஜூலை மாதத்தில் அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிக்கப்பட்டிருந்தது.
நாள்தோறும் ஹெட்செட் சுமக்கும் காதுகளுக்கு என்னென்ன பிரச்னைகள் வரும்? மருத்துவர் விளக்கம்!
தற்போது ஜூலை 1ஆம் தேதிமுதல் 3% அகவிலைப்படி உயர்வு முன் தேதியிட்டு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் 47 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவர் என்றும் தெரிவித்திருக்கிறது.