மும்பை மத்திய சிறையிலிருக்கும் தனது மகனைக் காண நடிகர் ஷாருக்கான் சிறைக்கு சென்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆர்யன் கான் கைதுக்கு பிறகு முதல்முறையாக ஷாருக்கான் பொதுவெளியில் தலைக்காட்டியுள்ளார்.
பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதை தடுப்புப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிறையில் அடைத்தது. ஆர்யன்கான் சார்பில் 2முறை ஜாமின் மனுக்கள் தாக்கல் செய்த போதும் அவற்றை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், மும்பை மத்திய சிறையிலிருக்கும் தனது மகனைக்கான ஷாருக்கான் வருகைதந்தார். இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. கிட்டதட்ட 20 நிமிடங்கள் ஷாருக்கான் – ஆர்யன் கான் சந்திப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. ஆர்யன் கானுக்கு இன்றுடன் நீதிமன்ற காவல் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
#WATCH Actor Shah Rukh Khan reaches Mumbai’s Arthur Road Jail to meet son Aryan who is lodged at the jail, in connection with drugs on cruise ship case#Mumbai pic.twitter.com/j1ozyiVYBM
— ANI (@ANI) October 21, 2021