இந்திய டி20 கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் ஷர்மா, ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவின் உடல் தகுதி குறித்து தகவல் தெரிவித்துள்ளார். இதனை இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் விளையாடும் பயிற்சி ஆட்டத்தின் டாஸின் போது சொல்லியிருந்தார் ரோகித். 

image

“அணியில் ஆறாவது பவுலிங் ஆப்ஷனாக ஒருவரது தேவை இருக்கிறது. மெயின் பவுலர்கள் சிறப்பாக பந்து வீசினாலும் ஒரு ஆப்ஷனாக ஆறாவது பவுலர் தேவைப்படுகிறார். களத்தில் ஏதேனும் ஒருநாள் பாதகமாக அமையும் போது அந்த ஆறாவது பவுலர் ஆப்ஷன் பெரிதும் உதவும். 

ஹர்திக் பந்து வீச தயாராகி வருகிறார். அவர் இன்னும் பந்து வீசவில்லை. உலகக் கோப்பை தொடர் ஆரம்பமாகும் போது ஹர்திக் பந்து வீச தொடங்கிவிடுவார்” என தெரிவித்துள்ளார் ரோகித். 

காயத்திலிருந்து மீண்ட ஹர்திக் கடைசியாக ஜூலையில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான தொடரில் பந்து வீசி இருந்தார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.