டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி வீழ்த்தியது.
துபாய் ஐசிசி அகாடமி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் டி20 உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் விளையாடின. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 152 ரன்களை எடுத்தது.
அந்த இலக்கை இந்தியா விரட்டியது. ரோகித் மற்றும் கே.எல்.ராகுல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 68 ரன்கள் எடுத்தனர். ராகுல், 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் களம் இறங்கிய சூரியகுமார் யாதவுடன் இணைந்து 59 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் ரோகித். அதோடு 41 பந்துகளில் 60 ரன்களை எடுத்திருந்தார் ரோகித். ரிட்டயர்ட் ஹேர்ட் முறையில் அவர் வெளியேறினார்.
சூரியகுமார் 27 பந்துகளில் 38 ரன்களை எடுத்தார். ஹர்த்திக் பாண்ட்யா 8 பந்துகளில் 14 ரன்களை விளாசி ஆட்டத்தை முடித்துக் கொடுத்தார். இந்தியா 17.5 ஓவர்கள் முடிவில் 153 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி, நியூசிலாந்தை 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.