சீனாவுடனான எல்லைப் பகுதியை நவீன ட்ரோன் விமானங்கள் மூலம் கண்காணிக்கும் பணியை இந்தியா தொடங்கியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் அருகேயுள்ள லடாக் எல்லை மட்டுமின்றி வட கிழக்கு மாநிலங்களையொட்டியுள்ள பகுதிகளிலும் சீனா தனது படைகளை குவித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே, எல்லைப் பகுதியில் தனது வீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது சீனா. இதனை கண்காணிக்கும் பணியில் முக்கிய நடவடிக்கையாக நவீன ட்ரோன் விமானங்களை இந்திய ராணுவத்தினர் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
இஸ்ரேல் நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ட்ரோன் விமானங்கள் அருணாச்சலப் பிரதேசம், அசாம் மாநிலத்தையொட்டிய சீன எல்லைப்பகுதிகளில் பறக்க விடப்பட்டுள்ளன. 30 ஆயிரம் அடி உயரம் வரையிலும் தொடர்ந்து 30 மணி நேரம் வரையிலும் பறக்கும் திறனுடைய இந்த நவீன ட்ரோன் விமானங்கள், இரவிலும் காட்சிகளை எடுத்து அனுப்பும் தன்மை கொண்டவை.
இதையும் படிக்க: காஷ்மீர்: மேலும் இரு தொழிலாளர்களை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்