நான்காவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்நிலையில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், “இந்த சீசனில் சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை உறுதியாக இருந்தது” என சொல்லியுள்ளார். 

image

“நாங்கள் நிறையை ஏற்ற, இறக்கங்களை சந்தித்திருக்கலாம். இந்த சீசனை நாங்கள் சிறப்பானதாக நிறைவு செய்ததில் மகிழ்ச்சி. என்னுடைய நான்காவது ஐபிஎல் பைனலில் நான் பட்டத்தை வென்ற அணியின் பக்கம் நிற்பதில் மன நிறைவு. மைதானத்தில் பனி படர்ந்திருந்தது. இருந்தாலும் அந்த அழுத்தத்தை நாங்கள் நன்றாகவே கையாண்டிருந்தோம். அதற்கு நாங்கள் கற்ற அனுபவமே காரணம். 

கொல்கத்தா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் விக்கெட்டுக்காக காத்துக் கிடந்தோம். ஏனெனில் அவர்களது பேட்டிங் வரிசையில் லோயர் ஆர்டர் சிறப்பான பங்களிப்பை கொடுக்கவில்லை என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். கடந்த சீசன் எங்களுக்கு மோசமான சீசனாக அமைந்திருந்தாலும் இந்த சீசனில் எங்களால் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கையை கொண்டிருந்தோம். நாங்கள் எல்லோரும் எங்கள் அணியின் கேப்டன் தோனிக்காக விளையாடினோம்” என சொல்லி உள்ளார் அவர். 

image

2021 ஐபிஎல் சீசனின் சென்னை அணிக்காக 15 போட்டிகளில் விளையாடிய தீபக் சாஹர் 14 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதில் ஒரே போட்டியில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அவர். 

இதையும் படிக்கலாம் : ‘கிரிக்’கெத்து 5: 2003 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக சச்சினின் பேட் எழுதிய காவியம் 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.