சென்னையின் முதல் மேயர் சிவராஜ், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக செயல்பட்ட போராளி. அம்பேத்கர் உருவாக்கிய அமைப்புக்கு அகில இந்திய தலைவராக அவராலேயே நியமிக்கப்பட்டவர். அம்பேத்கர் மறைவுக்குப் பிறகு இந்தியக் குடியரசுக்கட்சியின் தலைமைப்பொறுப்பை ஏற்றவர். பச்சையப்பன் கல்லூரி, நடேசன் பூங்கா, நேப்பியர் பூங்கா, நேரு ஸ்டேடியம் ஆகிய சென்னையின் அடையாளங்களுக்கும் சிவராஜுக்கும் உள்ள தொடர்பு உங்களுக்குத் தெரியுமா?
தமிழகத் தலித் தலைவர்கள் எந்தெந்த விஷயங்களில் அம்பேத்கரோடு முரண்பட்டார்கள், ஏன் சிவராஜ் அம்பேத்கரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான தலைவராக விளங்கினார், நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், பெரியாருடன் சிவராஜ் தம்பதிக்கு இருந்த உறவு குறித்து அறிவீர்களா?
வெளிநாட்டில் பிறந்து முதல் மொழிப்போரில் பங்குபெற்று போராடிய அன்னை மீனாம்பாள் வகுத்த பதவிகள் குறித்து தெரியுமா? ஈ.வெ.ராமசாமிக்கு பெரியார் பட்டத்தை மீனாம்பாள் மட்டும்தான் வழங்கினாரா? ஏன் சிவராஜையும் மீனாம்பாளையும் நினைவுகூர வேண்டும்?
விரிவாக விளக்குகிறது இந்த வீடியோ…