ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ராணுவ உயரதிகாரி ஒருவரும், 4 வீரர்களும் வீரமரணமடைந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் ராணுவ அதிகாரியும் 4 வீரர்களும் வீரமரணமடைந்தனர். துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதியும் கொல்லப்பட்டுள்ளார். மேலும் மூன்று பேர் அந்தப் பகுதியில் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தீவிரவாதிகளை கைது செய்ய என்கவுன்ட்டர் தளத்தில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், சூரன்கோட் பகுதிக்கு அருகே உள்ள கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து தேடுதல் வேட்டை நடந்தது என்று கூறியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.