இந்திய நாட்டில் டெஸ்லா நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யுமாறு பலமுறை அந்த நிறுவனத்திடம் தான் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி.
“இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யுமாறு டெஸ்லா நிறுவனத்திடம் நான் பலமுறை சொல்லிவிட்டேன். அதற்கான ஆதரவு மற்றும் சலுகைகளை தருவதாகவும் தெரிவித்துள்ளேன். அதே நேரத்தில் சீனாவில் உற்பத்தி செய்யப்படும் கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ளேன்.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கார்களை வேண்டுமானால் ஏற்றுமதி செய்து கொள்ளுங்கள் எனவும் தெரிவித்துள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
இறக்குமதி வரியை குறைக்குமாறு அரசிடம் டெஸ்லா நிறுவனம் கோரிக்கை வைத்துள்ள நிலையில் இதனை அவர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகனத்தை தான் குறைத்து மதிப்பிடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.